Dec 14, 2007

பங்களிப்போம்..

ஒவ்வொரு வருடமும் நூற்றிற்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். நூற்றிற்கு மேற்பட்டவர்கள் நல்ல மாணவர்களாகவும், நல்ல மனிதர்களாகவும் வெளியேறுகின்றனர். இவ்வூரின் பெரும்பான்மையானவர்கள் கற்ற இப்பாடசாலை 75 வருடங்களையும் தாண்டி தனது பணியை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதன் வளர்ச்சியில் சிலர் பங்கெடுக்கின்ற போதிலும் பலர் ஒதுங்கிவிடுகின்றனர். இங்கு எந்தக் குறையுமில்லை, இதற்கு எதிராக எந்த விமர்சனமும் இல்லை என முழுமையாக கூறிவிடவும் முடியாது. இக்கல்லூரியில் படித்து இன்று நல்ல நிலையில் இருக்கும் எத்தனை பேர் தன்னை வளர்த்துவிட்ட இக்கல்லூரி பற்றி சிந்திக்கின்றனர்..? அத்துடன் இக்கல்லூரி எனக்கு என்ன செய்தது? என்று கூறிக்கொண்டிருக்கும் ஒருசிலரின் மொக்குத்தனமான கருத்துக்களை விட்டு இது பற்றி சிந்திப்பவர்களாகவும், இதன் வளர்ச்சியில் பங்கெடுப்பவர்களாகவும் மாறுவோம்.

யாஅல்லாஹ்! எங்களுக்கு கல்வி புகட்டிய பாடசாலையின் வளர்ச்சியில் பங்கெடுப்பவர்களாக எங்களை ஆக்குவாயாக..!